நில அதிர்ச்சிக்கு நாசா வைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்தை ஏற்க இயலாது.விஞ்ஞானி.க.பொன்முடி.

நீங்கள் டிசம்பர் 26.2004 ,அன்று சுமத்ரா தீவிற்கு அருகில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்ச்சியைத் தொடர்ந்து கடலில் எழுந்த ராட்சச அலைகள் இழுத்துச் சென்றதில் இரண்டு லட்சத்தி முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததை அறிந்திருப்பீர்கள்.

அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவின் வடமேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடிவரை உயர்ந்து காணப் பட்டது.

எனவே சிமிழு தீவின் வடமேற்குப் பகுதி கடல் தரையில் இருந்து திடீரென்று மேல் நோக்கி உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது.

ஆனால் அந்த அதிர்ச்சியானது சுமத்ரா தீவிற்கு அடியில் இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்ததால் ஏற்பட்டது என்று முதலில் தெரிவித்த நாசா அமைப்பு பிறகு எந்தவொரு விளக்கத்தையும் கூறாமல் திடீரென்று சுமத்ரா தீவிற்கு அடியில் ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான் ஏற்பட்டது என்று முன்னுக்குப் பின் முரணாக எந்த ஒரு ஆதாரத்தையும் குறிப்பிடாமல் இரு வேறு கருத்துக்களை வெளியிட்டிருகிறது.

அத்துடன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் உரசல் ஏற்பட்டு தொடர்ச்சியாக நில அதிர்சிகள் பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் இரண்டு தனித் தனிக் கண்டங்களாக நகர்ந்து கொண்டு இருப்பதற்கு ஆதாரமாக இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்சிகள் ஏற்பட்டிருக்க வில்லை.

எனவே சுமத்ரா தீவிற்கு அடியில் இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்ததால் ஏற்பட்டது என்று கூறுவதற்கோ அல்லது சுமத்ரா தீவிற்கு அடியில் ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான் ஏற்பட்டது என்று நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற கூற்று.

எனவே சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்கு நாசா வைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்தை ஏற்க இயலாது.

குறிப்பாக அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவின் வடமேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடிவரை உயர்ந்து காணப் பட்டது.

எனவே உண்மையில் சிமிழு தீவின் வடமேற்குப் பகுதி கடல் தரையில் இருந்து திடீரென்று மேல் நோக்கி உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டிருப்பது உறுதியாகிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.