பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் கடல் தரை நகர்ந்து கொண்டிருக்கிறதா?

பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் தீவுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விளக்கத்தைக் கூறி வருகின்றனர்.

உதாரணமாக பசிபிக் பெருங் கடலைச் சுற்றி அமைந்திருக்கும் வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆஸ்திரேலியா நியூஸிலாந்து ஜப்பான் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் நில அதிர்ச்சி ஏற்படும்பொழுது, புவியியல் ஆராய்ச்சியாளர்கள் பசிபிப் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் தரைப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் இவ்வாறு வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் பசிபிக் கடல் தரை கண்டங்களுக்கு அடியில் வளைந்து சென்று பூமிக்குள் கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

இவ்வாறு பூமிக்குள் வளைந்து செல்லும் பசிபிக் கடல் தட்டு கண்டங்களின் விளிம்புகளுடன் உரசும் பொழுது நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று விளக்கம் தருகின்றார்கள்.

ஆனால் பசிபிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் தகித்தி போன்ற எரிமலைத் தீவில் நில நடுக்கம் ஏற்படுவதற்கு நகரும் கண்டங்கள் ஆராய்ச்சியாளர்களால் எந்த ஒரு விளக்கத்தைக் கூற இயலவில்லை.

குறிப்பாக தகித்தி என்ற எரிமலைத் தீவானது தென் பசிபிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கிறது.

கடந்த 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் நாள் தகித்தி தீவில் ரிக்டர் அளவில் 5.5. அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்த நில அதிர்ச்சிக்கு எந்த ஒரு ஆராய்ச்சியாளரும் இதுநாள் வரை எந்த ஒரு விளக்கத்தையும் கூற இயலவில்லை.

காரணம் தகித்தி தீவு பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கிறது.

இதே போன்று பசிபிக் பெருங் கடலின் வட பகுதியில் குறிப்பாக பூமத்திய ரேகைக்கு வடக்கே இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஹவாய்த் தீவில் நில நடுக்கம் ஏற்படும் பொழுது நில நடுக்கம் ஏற்ப்பட்ட ஒரு சில நிமிடங்களிலிலேயே நகரும் கண்டங்கள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர்.

அதாவது பசிபிக் கடல் தரையானது வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் இவ்வாறு பசிபிக் கடல் தரை நகர்ந்து கொண்டிருந்த பொழுது பூமிக்கு அடியில் இருந்து எரிமலைக் குழம்பு பசிபிக் கடல் தரையை பொத்துக் கொண்டு மேலே எழுந்ததால் ஹவாய்த் தீவுகள் உருவாகின என்று கூறுகின்றனர்.

இவ்வாறு வட மேற்க்கு திசையில் பசிபிக் கடல் தரை நகரும் பொழுது ஹவாய்த் தீவுகளின் நிலப் பகுதிக்கும் பசிபிக் கடல் தட்டின் தரைப் பகுதிக்கும் இடையே உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தருகின்றார்கள்.

ஆனால் அந்த ஹவாய்த் தீவில் இருந்து தென் கிழக்கு திசையில் நாலாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ததித்தி தீவும் ஒரு எரிமலைத் தீவுதான். குறிப்பாக ததித்தி தீவும் ஹவாய்த் தீவு அமைந்திருக்கும் அதே பசிபிக் கடல் தரை யின்மேல் தான் அமைந்திருக்கிறது.

எனவே ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைப் போல பசிபிக் கடலுக்கு அடியில் இருக்கும் தரை வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பது உண்மையென்றால், அவ்வாறு நகர்ந்து ஹவாய்த் தீவுப் பகுதியுடன் உரசல் ஏற்ப்பட்டு அதன் காரணமாகத்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பது உண்மையென்றால் ஹவாய்த் தீவில் நில அதிர்ச்சி ஏற்படும் பொழுது அதே பசிபிக் கடல் தரை மேல் அமைந்திருக்கும் ததித்தி தீவிலும் நில அதிர்ச்சி ஏற்பட வேண்டும்.

ஆனால் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மூன்றாம் நாள் ததித்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது ஹவாய்த் தீவில் நில அதிர்ச்சி ஏற்படவில்லை. அதே போன்று 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினைந்தாம் நாள் ஹவாய்த் தீவில் ரிக்டர் அளவில் 6.7 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது தகித்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்படவில்லை.

எனவே ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைப் போல பசிபிக் கடல் தரையோ அல்லது கண்டங்களோ நகர்ந்து கொண்டிருக்க வில்லை என்பது நிரூபணமாகிறது.

இந்நிலையில் தகித்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணம் எரிமலைத் தீவான தகித்தி தீவிற்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாக மாறும் பொழுது அதிலிருந்து நீரும் மற்ற வாயுக்களும் வெளியேறுவதால்,அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் புதிதாக உருவாகும் பாறைகள் அடர்த்தி குறைவாக இருக்கின்ற காரணத்தால் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் இருந்து மேல் நோக்கி உயர்கின்றன.

இவ்வாறு எரிமலைத் தீவுகளுக்கு அடியில் பாறைகள் மேல் நோக்கி உயரும் பொழுது அப்பகுதியில் இருக்கும் உயராத பாறைத் தட்டுகளில் விளிம்புகளுடன் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

அன்புடன் -விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.