ஒரு எதிர்பாராத கண்டு பிடிப்பின் கதை.

எதிர்பாராத விதமாகச் சில கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து இருக்கின்றன.
உதாரணமாக, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான வில்ஹெம் ரான்ஜென் ,குறைந்த அழுத்தமுடைய குழாய்களுக்குள் மின்னோட்டம் செல்லும் பொழுது ஏற்படும் விளைவுகளைப் பற்றி ஆய்வு செய்து கொண்டு இருந்த பொழுது ,எதிர்பாராத விதமாக எக்ஸ் கதிர்களை க் கண்டு பிடித்தார்.
அதே போன்று, அமெரிக்க ஜனாதி பதியான ,பெஞ்சமின் பிராங்க்ளின் ,சிறு வயதில்,பட்டம் விட்டுக் கொண்டு இருந்த பொழுது,கையில் மின் அதிர்வுகளை உணர்ந்து மேகத்தில் மின் சக்தி இருப்பதைக் கண்டு பிடித்தார்.
நானும் ஒரு விடுமுறை நாளில்,குறிப்பாக எந்த ஒரு வேலையுமின்றி வெறுமனே நடந்து வரலாம் என்று, சென்னை அண்ணா சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த பொழுது,எல் ஐ சி பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் இருந்த,நடை பாதையோரக் கடையில் அடுக்கி வைக்கப் பட்டு இருந்த,பழைய நேசனல் ஜியாகிரபிக் பத்திரிகைகளில் ஒன்றை எடுத்து,வாங்கலாமா என்று புரட்டிப் பார்த்தேன்.
அப்பொழுது,ஒரு பக்கத்தில்,ஒரு மலையின் மேல் இரண்டு பேர்,கையில் மண்வெட்டிகளுடன்,தரையைத் தோண்டிக் கொண்டு இருக்கும் படம் கண்ணில் பட்டது.
என்ன என்று படித்துப் பார்த்தேன்.
அவர்கள் இருவரும்,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடலுக்கு அடியில்,இருநூற்றி இருபது அடி ஆழத்தில்,வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதைப் படிவங்களைத் தோண்டி எடுத்துக் கொண்டு இருப்பதாகவும்,அவர்கள் நின்று கொண்டு இருக்கும்,மலையானது,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடலுக்கு அடியில்,இருநூற்றி இருபது அடி ஆழத்தில்,மூழ்கிக் கிடந்ததாகவும்,அதன் பின்னர்,கடல் மட்டத்துக்கு மேலே உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
ஏற்கனவே, நான் உள்நாட்டுப் பகுதிகளில் கடல் உயிரினங்களின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதைப் பற்றி படித்திருந்தேன்.
உடனே, எனக்கு அந்த மலை மட்டுமின்றி, மலையைச் சுற்றி இருந்த நிலப் பகுதிகளும்,கூட ,கடலுக்கு அடியில் இருந்தே,கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருக்க வேண்டும், என்று தோன்றியது.
அப்பொழுதே, நான் ஒரு புதிய விஷயத்தைக் கண்டு பிடித்து விட்டதாகவே பரபரப்பு அடைந்தேன்.
எனவே,என் கண்டு பிடிப்பை உறுதிப் படுத்திக் கொள்ள,கடல் உயிரினங்களின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் குறித்து தேடிய பொழுது,எல்லாக் கண்டங்களிலும்,பரவலாகக் கடல் உயிரினங்களின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிந்தது.
எனவே,கண்டங்கள் ஏன் பக்க வாட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுகிறார்கள், என்று தெரிந்து கொள்வதற்காக இணையத்தில் தேடினேன்.
அப்பொழுது ,கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும், கண்டங்களிலும்,தீவுகளிலும்,கண்டு பிடிக்கப் பட்டு, இருப்பதன் அடிப்படையில்,அந்த விளக்கம் கூறப் படுகிறது என்று தெரிந்து கொண்டேன்.
அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.ஒரு வேளை,கடல் மட்டம் தாழ்வாக இருந்து,கண்டங்களுக்கு இடையில்,நிலத் தொடர்பு இருந்து,அதன் வழியாக விலங்கினங்களின் இடப் பெயர்ச்சி நடை பெற்ற பிறகு,கடல் மட்டம் உயர்ந்து இருக்கலாமோ என்று தோன்றியது.
உடனே,கடலுக்கு அடியில்,ஏதாவது புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறதா என்று, இணையத்தில் தேடினேன்.
நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில்...நார்வே நாட்டுக் கடல் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில்
இருக்கும் கடல் தரையில்,எண்ணெய் எடுப்பதற்காகத் துளையிட்ட பொழுது கிடைத்தப் பாறைப் பகுதிகளில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தில்,பரவலாக வாழ்ந்த,பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும்,தாவர உண்ணி டைனோசரின் புதைப் படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருப்பது பற்றி ,பி பி சி உள்பட பல தளங்களில் தெரிவிக்கப் பட்டு இருப்பதைப் படித்ததும் அதிர்ச்சியடைந்தேன்.
அதே போன்று,இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கூட,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும்,ஒரு கடலடிப் பீட பூமியானது,எப்பொழுது உருவானது என்று அறிவதற்காக,ஆராய்ச்சியாளர்கள்யி,அந்தக் கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில்,துளையிட்ட பொழுது,கிடைத்த எரிமலைப் படிவப் பாறைகளில்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,புதையுண்ட மரங்களின்,கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்து இருப்பது பற்றி ,பி பி சி தளத்தில், தெரிவிக்கப் பட்டு இருப்பதைப் படித்தேன்.
எனவே நான் நினைத்தது சரியே என்ற முடிவுக்கு வந்தேன்.
எனவே,கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது.
உடனே எனக்கு,கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள் நினைவுக்கு வந்தது.
தற்பொழுது,சுடு நீர் ஊற்று நீரானது,பூமிக்குள் செல்லும் கடல் நீரானது,பூமிக்கு அடியில் இருக்கும் வெப்பமான பாறைக் குழம்பால் சூடாக்கப் பட்டு மேல் நோக்கி உயர்ந்து,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறுவதாக விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
ஆனால்,எனக்கு அந்த விளக்கத்தில் சந்தேகம் எழுந்தது.
பொதுவாக,நிலத்தில் காணப் படும் ஊற்று நீரானது,பூமிக்குள் இறங்கும் மழை நீரானது,நீர் புக முடியாத பாறை அடுக்ககள் இருக்கும் பகுதியில்,தேங்கி நிரம்பி,நிலத்துக்கு மேலே,ஊற்று நீராக வெளிப் படுகிறது என்று விளக்கம் கூறப் படுகிறது.
இந்த நிலையில் ,ஜப்பான் நாட்டில் மாச்சு கிரோ நகரில்,இருந்த சுடு நீர் ஊற்று நீரை,டாக்டர் யோசிதா என்ற அராய்ச்சியாளர்,ஒரு பாட்டிலில் சேகரித்து ஆய்வு செய்த பொழுது,அந்த நீரானது,பூமியின் ஆழமான பகுதியில் இருந்து வந்த நீர் என்பதைக் கண்டு பிடித்தார்.
அதே போன்று,நிலவின் மேற்பரப்பில் கண்டு பிடிக்கப் பட்ட,பனிக் கட்டிகள் கூட,நிலவின் ஆழமான பகுதியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிருந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர், என்று நாசாவின் இணையத்தில்,தெரிவிக்கப் பட்டு இருப்பதைப் படித்தேன்.
அத்துடன்,தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்குக் கூறப் படும் விளக்கமானது தவறு என்பதையும் தெரிந்து கொண்டேன்.
குறிப்பாகத் தற்பொழுது,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்குப் பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பது, தெரிய வந்துள்ளது.
குறிப்பாகத் தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகையில் இருக்கும், கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால், பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று நம்பப் படுகிறது.
இந்த நிலையில்,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு அண்டார்க்டிக் கண்டத்தின் பனி உருகல் காரணம் அல்ல, என்று நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி கண்டுபிடித்து இருக்கிறார்.
குறிப்பாக, அந்த ஆராய்ச்சிக் குழுவினர்,அண்டார்க்டிக்காக் கண்டத்தில் பெரிய பரப்பளவில்,குறைவாக உயர்ந்த பனியின் அளவு பற்றிய, செயற்கைக் கோள் பதிவுகளையும், அதே போன்று குறைந்த பரப்பளவில், அதிகமாக உயர்ந்த, பனிப் படலங்கள் பற்றிய, செயற்கைக் கோள் பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில், உலகில் தொண்ணூறு சதவீதப் பனியைக் கொண்டு இருக்கும், அண்டார்க்டிக்காக் கண்டத்தில் ,10,000 ஆண்டுகளுக்கு முன்பு, பனியின் அளவு அதிகரிக்கத் தொடங்கியதாக, டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் கடல் மட்ட உயர்வுக்கு, வேறு எதோ காரணம் இருக்கலாம்! என்றும் டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில், புதை படிவ ஆதாரங்கள் மூலம், கடந்த காலத்தில், ஒரே கால கட்டத்தில், கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம் கடல் மட்ட உயர்வுக்கு கூறப் படும் குளோபல் வார்மிங் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்கள் சாதாரணமாக பதினைந்து அடி ஆழத்தில் வாழக் கூடியது.கடல் மட்டம் உயர்ந்தால் இந்தப் பவளப் பாறைத் திட்டுகளும் அதற்கேற்ப வளரக் கூடியது.குறிப்பாக அக்ரோ போரா பால்மேட்டா பவளங்களானது இறக்கும் பொழுது அதனால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருட்கள் பவளப் பாறைத் திட்டில் படிந்து விடும் இதனால் அந்தப் பவளப் பாறைத் திட்டு வளரும்.குறிப்பாக அக்ரோபோரா பால்மேட்டா பவளத் திட்டானது ஆண்டுக்கு ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் வரை வளரக் கூடியது.
இந்த நிலையில் கடல் மட்டமானது ஆண்டுக்கு பத்து சென்டி மீட்டருக்கும் அதிக வேகத்தில் உயர்ந்தால் அக்ரோ போரா பாலமேட்ட பவளத் திட்டில் உள்ள, எல்லா பவளங்களும் இறந்து விடும்.இந்த நிலையில் அந்தப் பவளத் திட்டில் ஆழமான பகுதியில் வளரக் கூடிய மற்ற பவளங்கள் வளரத் தொடங்கும்.
இந்த நிலையில், கரீபியக் கடல் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்களின் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடந்த 26,500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமானது 120 மீட்டர் ( நானூறு அடி ) வரை தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் ,கோபன் கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,வட துருவப் பகுதியில்,பனி யானைகள் இறந்தற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.
குறிப்பாக அவர்கள்,வட துருவப் பகுதியில்,பனித் தரைக்கு அடியில் புதைந்து கிடந்த தாவரங்களின் மகரந்தங்கள்,விலங்கினங்களின் கழிவுகள் மற்றும் அந்த விலங்குகளின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுப் பொருட்களைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவு அதிகரித்ததால்,பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும்,அதன் பிறகு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேலும் பனிப் பொழிவு அதிகரித்தால்,பூக்கும் தாவரங்கள் அருகி ,புற்கள் மட்டுமே இருந்ததாகவும்,அதனால் சத்துக் குறைவால் பனி யானைகள் அழிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இவ்வாறு, கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதுடன் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பதன் மூலம்,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பது தெரிய வந்துள்ளது.
தற்பொழுது, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உள்பட மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட,கடல் மட்டமானது, அதிக பட்சமாக இருநூற்றி நாற்பது அடிவரையே உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.
ஆனால், கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் பவளத் திட்டு ஆய்வில்,கடல் மட்டமானது நானூறு அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இவ்வாறு, கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு தற்பொழுது வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது, இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியும், பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,குறிப்பாக சிக்காக்கோ நகரானது, மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கு பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அதனால் கடல் மட்டமானது, நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும் ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ,பேராசிரியர்,ஆண்ட்ரூ டிராக்ஸ்லர் தெரிவித்து இருக்கிறார்.
அதன் பிறகு, பூமி வெப்பமடைந்ததால் நிலத்தின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது.
இந்த விளக்கம் தவறு.எப்படி என்றால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து,அதனால் நிலத்தின் மேல் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் பொழுது,வெப்ப நிலை உயர்வால் கடல் நீரும் ஆவியாகத் தொடங்கும்,அதனால் கடலில் இருக்கும் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் சென்று நிலத்தின் மேல் மழையாகப் பொழிந்து, ஆறுகளில் கலந்து இறுதியில் கடலிலேயே கலந்து விடும்.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்வதால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாது.
எனவே, பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததால், கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது, என்று கூறப் படும் விளக்கம் தவறு.
அதே போன்று, பூமி குளிர்ந்ததால் நிலத்தின் மேல் பனிப் படலங்கள் உருவானதாகவும்,அதனால் கடல் மட்டம் தாழ்வடைந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.ஏனென்றால் பூமியின் வெப்ப நிலை குறையும் பொழுது,கடல் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் செல்வதும் குறைந்து விடும்.எனவே ஏற்கனவே நிலத்தின் மேல் இருந்த மேகம் மட்டுமே பனியாக நிலத்தின் மேல் படியும்.எனவே பூமியின் வெப்ப நிலை குறைவதாலும் கூட ,கடல் மட்டத்தில் தாழ்வு ஏற்படச் சாத்தியம் இல்லை.
இந்த நிலையில், சமீபத்தில் கூட நார்த் வெஸ்டர்ன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற ஆராய்ச்சியாளர்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ,பூமிக்கு மேலே இருப்பதைக் காட்டிலும்,பூமிக்கு அடியில்,மூன்று மடங்கு அதிகமான நீர் இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில் பூமிக்கு மேலே இருக்கும் நீர் ,பூமிக்கு அடியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனவே, பூமிக்கு அடியில் இருந்து வந்த நீராலேயே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.அத்துடன் பூமிக்கு அடியில் இருந்து வந்த நீராலேயே, கடல் உருவாகி இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டேன்.
எனவே,கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும், கண்டங்களிலும்,தீவுகளிலும்,கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதற்கு,முன் ஒரு காலத்தில்,கடல் மட்டம் தாழ்வாக இருந்ததுடன்,கண்டங்களுக்கு இடையில்,காடுகளுடன் கூடிய நிலத் தொடர்பு இருந்து,அதன் வழியாக விலங்கினங்களின் இடப் பெயர்ச்சி நடை பெற்ற பிறகு,கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது என்பதை உறுதிப் படுத்திக் கொண்டேன்.
இந்த நிலையில்,கண்டங்களானது,கடல் தளங்களுடன் நகர்ந்து ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகுவதாக விளக்கம் கூறும் புவியியல் வல்லுனர்களால்,உண்மையில் அந்தக் கருத்தின் அடிப்படையில்,சுமத்ரா மற்றும் ஹைத்தி தீவுகளில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும், விளக்கம் கூற இயலாத நிலையில் இருப்பதையும், இணையத்தில் வெளியிடப் பட்ட, அவர்களின் விளக்கங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
அதே போன்று,வட துருவப் பகுதியில்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதற்கும்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத ஆமைகளின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதற்கும், விளக்கம் கூற இயலாத நிலையில்,ஆராய்ச்சியாளர்கள் இருப்பதையும்,
இணையம் மூலம் தெரிந்து கொண்டேன்.
உண்மையில் பூமி வெப்ப நிலை உயர்ந்து, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருக் நீராகிக் கடலில் கலந்து, கடல் மட்டம் உயர்ந்தால் நல்லதுதான், ஏனென்றால் துருவப் பகுதகளில் இருக்கும் பனிப் படலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட, அதிக பட்சம் இருநூற்றி நாற்பது அடி வரைதான் கடல் மட்டம் உயரும்.
அனால், உண்மையில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம், பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது ,பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீர், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதே காரணம் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
பூமியின் பெரும்பகுதியும் பாறைக் குழம்பால் ஆகி இருப்பதுடன், பூமியும் குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பூமிக்கு அடியில் இருந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பாறைக் குழம்பு நீரானது தொடர்ந்து வெளியேறும்.எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயரும்.அதனால் நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும்.
அதனால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும்.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

விஞ்ஞானிகள் கூறிய தவறான விளக்கங்களும், அதற்கான உண்மை காரணங்களும்.