ஆர்க்டிக் மர்மம்--துருவப் பகுதிகளில் காடுகள் எப்படி வளர்ந்தன?
துருவப் பகுதிகளில் காடுகள் எப்படி வளர்ந்தன? தாவரவியல் வல்லுனர்கள் தலைகீழாக நின்று யோசிக்கிறார்கள். விலங்கியல் வல்லுனர்கள் விட்டத்தைப் பார்த்து யோசிக்கிறார்கள். புவியியல் வல்லுனர்களோ... புஜங்காசனம் செய்தபடி யோசிக்கிறார்கள். ஆனாலும் , தற்பொழுது பனிப் படலங்களால் மூடப்பட்டு இருக்கும். துருவப் பகுதிகளில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி வளர்ந்தன என்ற புதிருக்கு விடை கண்டு பிடித்து உலக அளவில் பெயர் பெற வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இரவும் பக்கம் கணிப் பொறி உதவியுடன் தீவிர ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். அனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விடை தெரிந்த பாடில்லை. இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள பிரச்சினையின் பற்றி ஆதியோடந்தம் வரை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒரு சின்ன பிளாஷ் பேக்... இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மூன்று அடி நீளமுள்ள, உடும்பு போன்ற,மெசோ சாரஸ் என்று பெயரிடப் பட்ட, துடுப்புக் கால்களுடன், கடற் கரை ஓரத்தில் வாழ்ந்து மடிந்த. ஊர்வன வகை விலங்கின், எலும்புப் புதைபடிவங்களானது அட்லாண்டிக்...