Posts

ஆர்க்டிக் மர்மம்--துருவப் பகுதிகளில் காடுகள் எப்படி வளர்ந்தன?

துருவப் பகுதிகளில் காடுகள் எப்படி வளர்ந்தன? தாவரவியல் வல்லுனர்கள் தலைகீழாக நின்று யோசிக்கிறார்கள். விலங்கியல் வல்லுனர்கள் விட்டத்தைப் பார்த்து யோசிக்கிறார்கள். புவியியல் வல்லுனர்களோ... புஜங்காசனம் செய்தபடி யோசிக்கிறார்கள். ஆனாலும் , தற்பொழுது பனிப் படலங்களால் மூடப்பட்டு இருக்கும். துருவப் பகுதிகளில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி வளர்ந்தன என்ற புதிருக்கு விடை கண்டு பிடித்து உலக அளவில் பெயர் பெற வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இரவும் பக்கம் கணிப் பொறி உதவியுடன் தீவிர ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். அனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விடை தெரிந்த பாடில்லை. இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள பிரச்சினையின் பற்றி ஆதியோடந்தம் வரை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒரு சின்ன பிளாஷ் பேக்... இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மூன்று அடி நீளமுள்ள, உடும்பு போன்ற,மெசோ சாரஸ் என்று பெயரிடப் பட்ட, துடுப்புக் கால்களுடன், கடற் கரை ஓரத்தில் வாழ்ந்து மடிந்த. ஊர்வன வகை விலங்கின், எலும்புப் புதைபடிவங்களானது அட்லாண்டிக்...

My Explanation for the distribution fossils

ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்படுத்தும் ஆர்க்டிக் புதைபடிவங்கள். ‘’ஆர்க்டிக் பகுதியில் தொடந்து ஐந்து மாதங்கள் இரவு நீடிக்கும் நிலையில், டைனோசர்கள் வாழ்ந்த அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி வார்ந்தன?’’ ( சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு சென்டிகிரேட் வெப்ப நிலை தேவை. . ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள எட்மாண்டோ சாரஸ்,என்ற டைனோசரின் புதைபடிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. இதுபோன்ற பெரிய அளவு டைனோசர்கள் அடை காப்பது இல்லை.எனவே ஆர்க்டிக் பகுதியில் கால்பந்து அளவு உள்ள,டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.) பூமியானது தன் அட்சில் இருபத்திமூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில், சூரியனைச்சுற்றிக்கொண்டு இருப்பதால், துருவப்பகுதிகளில் ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்து பகலும், அதே போன்று, ஐந்து மதங்கள் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இவ்வாறு ஐந்து மாதங்கள் தொடர்ந்து நீடிக்கும் குளிர் காலத்தில், வெப்ப நிலையானது மைனஸ் எண்பது டிகிரி வரை செல்கிறது. இந்தநிலையில் தாவரங்களால் சூரிய ஒளியின்றி ஒளிச்சேர்க்கை செய்து தங்களின் வளர்ச்சிக்குத் தேவையா...