ஆய்வுச் சுருக்கம்.
ஆய்வுச் சுருக்கம். இந்த உலகமக்கள் ஆட்டுவிக்கும் ஒரு முக்கியமான பிரச்சினைக்கு காரணம் கண்டு பிடித்து இருக்கிறேன்.ஆம்...நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் முக்கியமான காரணம் புவியடி எரிமலை வெடிப்புகளே என்பதே எனது ஆய்வின் முடிவில் தெரிய வந்திருக்கிறது. பூமியின் மேலோடானது கண்டங்களாலும் கடல் தளத்தாலும் ஆனது.கண்டங்களானது இலேசான கிரானைட் பாறையால் ஆகி இருக்கிறது.இதன் சராசரி தடிமனானது நாற்பது கிலோ மீட்டர்.கடல்தளமானது கடினமான நீரை உறிஞ்சாத கடப்பாக் கல்லால் ஆனது.இதன் சராசரி தடிமனானது ஏழு கிலோ மீட்டர். இந்த மேலோடானது நிலையாக இருக்கிறது.புவியடி எரிமலை வெய்ப்புகளால் நில அதிர்ச்சியிலும் சுனாமிகளும் ஏற்படுகின்றன என்பது எனது ஆய்வில் பல ஆதாரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.'ஆனால் கண்டங்களானது கடல்தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாகக் கண்டங்களுக்கு இடையில் உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு, பாறைக் குழம்பு தொடர்ந்து வந்து, குளிர்ந்து இருகிப் புதிய கடல்தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி வி...