ஒரு விஞ்ஞானியின் மூன்று கண்டுபிடிப்புகள் பற்றிய டயரிக் குறிப்புகள்.
பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது. பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது, பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. ---விஞ்ஞானி.க.பொன்முடி. "பூமியைப் பற்றி இது வரை யாரும் அறிந்திராத பல ரகசியங்களைத் தெரிவிக்கும் புத்தகம்'' 0000000000000000 ஒரு விஞ்ஞானியின் மூன்று கண்டுபிடிப்புகள். ஆசிரிய உரை. இந்தப் புத்தகம் எனது மூன்றாவது புத்தகம்.முதல் புத்தம்''பூமிப பந்தின் புதிர்கள்''விகடன் பிரசுரம் வெளியிட்டது.இரண்டாவது புத்தகம்''பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது''நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டது.அடுத்து எழுதப் போகும் மூன்றாவது புத்தகம்தான்,நான் எழுதும் கடைசிப் புத்தகம் என்ற முடிவோடுதான், இந்தப் புத்தகத்தை எழுதினேன். அதனால் எனது ஆராய்ச்சியில் நான் கண்டறிந்த உண்மைகளை, மிச்சம் வைக்காமல் முழுவதுமாக தெரிவித்து விட வேண்டும் என்கிற முனைப்போடு இந்தப் புத்தகத்தை எழுதினேன். கடந்த 23 ஆண்டு காலமாக, இணையத்தின் புதை படிவங்கள் குறித்த தகவல்களைத் திரட்டி, அலசி ஆராய்ந்து கண்டறிந்தேன். எனது ஆய்வில்,குறிப்பாகக் கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில...