Posts

tsunami1000

தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.அதே போன்று,கண்டங்கள் கடல் தரையுடன் நகரும் பொழுது,கடலுக்கு அடியில் இருக்கும் கண்டங்களின் அடிப்படகுதிக்கும்,தீவுகளுக்கு அடிப் பகுதியிலும்,உரசியபடி நகர்ந்து செல்வதாகவும்,அதனால் பாறைத்த தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும்,அதனால் கடலுக்கு அடியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருக்கும் கடல்நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி அலைகள் உருவாகுவாகு வதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தக் கருத்துக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு,வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில், உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214,நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக...

study

ஆர்க்டிக் பகுதி புதை படிவப் புதிர்களுக்கு விடை என்ன? ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு….. கடுங் குளிர் பிரதேசமான வட துருவ ஆர்க்டிக் வளைய பகுதியில், ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, பனிரெண்டு இன. வகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இந்தக் கண்டு பிடிப்பானது ஆராய்ச்சியாளர்களை தலை முடியை பிச்சுக் கொள்ள செய்து இருக்கிறது. பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் துருவங்களில் நான்கு மாத காலம் தொடர்ந்து ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் ‘’பத்து கோடி ஆண்டுகளுக்கு’’ முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது. சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிர...