Posts

பொறி கதவுச் சிலந்திகள் எப்படிப் பெருங் கடலைக் கடந்தன?

Image
ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள கங்காரு தீவில் காணப் படும் ஒரு வகை சிலந்திப் பூச்சி,ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப் படுத்தி இருக்கிறது. ''ட்ராப் டோர் சிலந்தி'' என்று அழைக்கப் படும்,அந்த சிலந்திப் பூச்சியானது,தரைக்கு அடியில் சிறிய குழியை உருவாக்கிய பிறகு,அதன் மேற்பகுதியை,குச்சிகள் மற்றும் குப்பைகளால், மூடி போன்ற ஒரு கதவை உருவாக்கிய பிறகு,அதற்குள் மறைந்து கொள்கிறது. அதன் பிறகு, அந்த வழியே சிறிய பூச்சிகள் வரும் பொழுது,திடீரென்று அந்தக் கதவைத் திறந்து வெளியே வந்து அதன் இரையைப் பிடித்த ு உண்கிறது. பின்னர், இதே போன்று, மறுபடியும் ஒரு இரை வரும் வரைக்கும், அதே குழிக்குள் மறைந்து இருக்கிறது. இவ்வாறு, தனது குழியை ஒரு கதவின் மூலம் பாதுகாப்பதால்,அந்த சிலந்திப் பூச்சியானது,பொறிக் கதவு சிலந்தி என்று அழைக்கப் படுகிறது. இதன் அறிவியல் பெயர் ‘மாக்ரிட்ஜியா ரெயின் போவி’ ஆகும். குறிப்பாக,பொறிக் கதவு சிலந்தியின் தாய் ஒரு குழியை உருவாக்கிய பிறகு,அதற்குள் முட்டைகளை இடுகிறது.முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் பெரிதாகிய பிறகு,வெளியே வரும், புதிய சிலந்திகளானது, ஒரு சில அடி தூரத்திலேய...

புதைப் படிவங்கள் காட்டும் பூமி.

டைனோசர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்த காலம் வரைக்கும்,பாலூட்டி வகை விலங்கினங்களால் வெளியில் தலை காட்ட முடியாமல் இருந்தது. தற்பொழுது, ஐயாயிரத்த ி ஐநூறுக்கும் அதிகமான, பாலூட்டி இனங்கள் காணப் படுகின்றன. ஆனால், டைனோசர்களின் காலத்தில்,மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பாலூட்டி இனங்கள் இருந்தன. அவைகளும் ,மரங்களிலும்,தரைக்கு அடியில் வளை பறித்து வாழும் இனங்களாகவே, அதிகம் இருந்தன. ஆனாலும் , சீனாவில் கண்டு பிடிக்கப் பட்ட புதைப் படிவம் மூலம் ஒரு விலங்கு பன்றியின் அளவு இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதாவது டைனோசர்களின் இனம் அழிந்த பிறகு.பூமியில் மயான அமைதி நிலவியது. உடனே பாலூட்டி விலங்கினங்கள் வெளியில் தலை காட்டத் தொடங்கின. இந்தக் காலத்தில், காலியாக இருந்த வயல் வெளியில், பாலூட்டி வகை விலங்கினங்கள் வாழத் தொடங்கின. மேய்ச்சல் விலங்குகளைக் கொன்று தின்னும் விலங்கினங்கள், பரிணாம வளர்ச்சியில் தோன்றின. அவைகளிடம் இருந்து தப்பிக்கும் வண்ணம் ,வயல் வெளியில் வேகமாக ஓடக் கூடிய ,குளம்புக் கால் விலங்கினங்களும் இந்தக் காலத்திலேயே ,பரிணாம வளர்ச்சியில் தோன்றின. ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன...

புவியியல் வல்லுனர்களுக்கு வந்த சோதனை.

கண்டத் தட்டுக் கொள்கையானது, ஒரு தவறான கொள்கை என்பதுடன்,அந்தக் கொள்கையின் அடிப்படையில்,நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூற இயலாத நி லையில் புவியியல் வல்லுனர்கள் இருக்கிறார்கள், என்பதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். கடந்த 12.1.2010 , அன்று,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும்,கரீபியன் தீவுப் பகுதியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில்,ஏற்பட்ட பயங்கரமான நில அதிர்ச்சி மற்றும் சுனாமியில்,இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், புவியியல் வல்லுனர்கள்,அடிப்படை ஆதாரமற்ற, ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். அந்த விளக்கத்தைப் பற்றி அறிவதற்கு முன்பு, ஹைத்தி தீவின் தோற்றம் குறித்து, புவியியல் வல்லுனர்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை அறிவது அவசியம். புவியியல் வல்லுனர்கள் நம்பும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் படி, வட அமெரிக்கக் கண்டமானது,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில், தொடர்ச்சியாக உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன...

கண்டத் தட்டுக் கொள்கைக்கு வந்த சோதனை.

உயிரினங்கள் எவ்வாறு ஓரிடத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்குப் பரவியது, என்பது குறித்து ஆராயும் அறிவியல் பாடப் பிரிவுக்குப் பயோஜியோகிராபி (Bio geography ) என்று பெயர். பத்தொன்பதாம் நூற்றாண்டில்,பீகிள் கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்ட இளம் ஆராய்ச்சியாளரான டார்வின்,தென் அமெரிக்கக் கண்டத்தில் இறங்கி ஆராய்ச்சி செய்த பொழுது,அங்குள்ள ஆறுகளிலும் குட்டைகளிலும்,ஏற்கனவே அவர் ஐரோப்பாக் கண்டத்தில் பார்த்த நன்னீர் உயிரினங்கள் காணப் படுவதைக் கண்டு எப்படி இந்த உயிரினங்கள் பல்லாயிரம் மைல் கடல் பகுதியைக் கடந்து இந்தக் கண்டத்துக்கு வந்திருக்க முடியும் என்று வியப்படைந்தார். குறிப்பாக அவர் குளம் குட்டைகளில் இருக்கும் நத்தைகளானது, பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார். இது போன்று, பெருங் கடல் பகுதியைத் தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள் தற்செயலாகக் கடந்தன என்று கூறப் படும் விளக்கமானது, 'பரவல் முறை' (dispersal) என்று அழைக்கப் படுகிறது. ஆனால், வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்கள் வட அமெரிக்கா,தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படு...

எப்படி உருவானது கல் மரப் பூங்கா?

தமிழகத்தில் திருச்சிக்கு அருகில் சாத்தனூரில் டைனோசர்களின் காலத்தில் வளர்ந்த ஒரு மரமானது கல்லாக மாறி இருப்பது, காட்சிக்காக வைக்கப் பட்டு இருக ்கிறது. அதே போன்று, வட அமெரிக்கக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதி மாகாணமான அரிசோனாவில்,அறுநூறு கிலோ மீட்டர் பரப்பளவில் ஏராளமான கல் மரங்கள் காணப் படுகின்றன. இந்தப் பகுதியானது கல்மரப் பூங்கா என்று அழைக்கப் படுகிறது. தற்பொழுது,வறண்ட பாலை வானமாகத் தென்படும் கல் மரப் பூங்காப் பகுதியில்,கயோட்டி என்று அழைக்கப் படும் ஓநாய்கள்,பாம்புகள்,சிறிய ஊர்வன வகைப் பிராணிகள் காணப் படுகின்றன. ஆனால்,இந்தப் பகுதியில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வாழ்ந்த,பைட்டோ சாராஸ் என்று அழைக்கப் படும் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கு மற்றும் தவளைகளின் புதைப் படிவங்களும்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கால கட்டத்தில்தான்,டைனோசர்கள் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றதால்,ஆதி கால டைனோசர்கள் போன்ற விலங்கினங்களின் புதைப் படிவங்களும், இந்தப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கல் மரப் பூங்காவானது,வெப்ப ...

டைனோசர் காலத்தில்... ராட்சதக் கடல் பல்லிகள் ஏன் அழிந்தன?

அறிமுக உரை. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனங்கள் அழிந்த பிறகு,மூஞ்சூறு போன்ற ஒரு மூதாதைப்  பாலூட்டி விலங்கினத்தில் இருந்து ,ஒரு கோடி ஆண்டுகளில்,தற்பொழுது நாம் காணும்,ஐயாயிரத்தி ஐநூறுக்கும் அதிகமான பாலூட்டி வகை விலங்கினங்கள் தோன்றின.இந்தக் கால கட்டமானது 'பாலூட்டிகளின் காலம் என்று அழைக்கப் படுகிறது. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டமானது,மெசோ சொயிக் காலம் என்றும் நடு உயிர் காலம் என்றும்,ஊர்வன விலங்குகளின் காலம் என்றும் அழைக்கப் படுகிறது. தற்பொழுது நீரிலும்,நிலத்திலும்,வானில ும் வாழக் கூடிய விளங்கினமாகப் பாலூட்டி வகை விலங்கினங்கள் இருக்கின்றன. ஆனால்,மெசோ சொயிக் காலத்தில்,நீரிலும்,நிலத்தி லும்,வானிலும் வாழ்ந்த விலங்கினமாக ஊர்வன வகை விலங்கினங்களே இருந்தது. பிறகு ஏன் இந்த மற்றம் நிகழ்ந்தது? இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன்பு, ஒரு அடிப்படையான விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஊர்வன வகை விலங்கினங்களால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது,எனவே அவைகளின் உடல் வெப்ப நிலையானது,சூழ் நிலையின் வெப்ப நிலையிலேயே ...

வாலஸ் கோடு போட்டார்... டார்வின் ரோடு போட்டார்.

ஐரோப்பியர்கள் முதன் முதலில் கடலில் நெடுந் தொலைவுக் கடல் பயணங்களை மேற்கொண்ட பொழுது,பல்வேறு கண்டங்களிலும்,தீவுகளிலும் விலங்கினங்கள் இருப்பதைக்  கண்டாலும்,அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.அவைகள் எல்லாம் இயற்கையில் ஆங்காங்கே படைக்கப் பட்டவைகள் என்று நம்பப் பட்டது. அந்தக் காலத்தில்,புதிய கண்டங்கள் கண்டு பிடிக்கப் பட்டதால்,அந்தக் கண்டங்களில் காணப் படும் புதிய விலங்கினங்கள்,தாவரங்கள் பற்றி அறிவதில் ஐரோப்பியர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.அது தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள்,புத்தகங்கள் மட்டுமின்றி அருங் காட்சியகங்களும் உருவாகின. அப்பொழுது, அருங் காட்சியகங்களுக்கு தேவையான மாதிரிகளைச் சேகரிப்பதற்காக ,சார்லஸ் டார்வினின் நண்பரும் இயற்க்கை ஆராய்ச்சியாளருமான, ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் ,ஒரு கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் செய்தார். அப்பொபொழுது,ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,காணப் படும் விலங்கினங்களும்,அதே போன்று,ஆசியா மற்றும் ஆசியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,காணப் படும் விலங்கினங்களும்,வெவ்வேறாக இருப்பதைக் கவனித்தார். குறிப்பாக, ஆசியக் க...