Posts

நில அதிர்ச்சி சுனாமி எனது கண்டு பிடிப்பு நிரூபணமாகியுள்ளது.விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
கடந்த 12.01 .2010 அன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு மத்தியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் பயங்கரமான நில அதிர்ச்சியும் அதன் தொடர்ச்சியாக சிறிய அளவிலான சுனாமியும் ஏற்பட்டபொழுது நில அதிர்ச்சியின் மையப் பகுதியில் இருந்த லியோகேன் என்ற துறைமுக நகரத்தின் கடற்கரைப் பகுதியில் கடல் மட்டத்திற்கு மேலாக நிலம் இரண்டு அடி வரை உயர்ந்து இருந்தது. அத்துடன் அப்பகுதியில் கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சு உள்ளிட்ட கடல் தாவரங்கள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தது. (படம்1) இந்த நிலையில் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு ஹைத்தி தீவை ஒட்டியவாறு ஹைத்தி தீவிற்கு வடக்கே அமைந்து இருக்கும் வட அமெரிக்கக் கண்டம் ஆண்டுக்கு இரண்டு செண்டி மீட்டர் வீதத்தில் மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ,அதனால் வட அமெரிக்கக் கண்டத் தட்டிற்கும் ஹைத்தி தீவுப் பாறைத் தட்டிற்கும் இடையே ஏற்பட்ட நீண்ட கால அழுத்தம் விடு பட்டு உரசல் ஏற்பட்டதால்தான் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.(ப...

ஆப்பிரிக்கக் கண்டம் எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது?விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
Age of oceanic crust. The red is most recent, and blue is the oldest. ............................................................................ தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் கடல் தரையின் மேல் வடக்கு தெற்காக அறுபதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்ட கடலடி மலைத் தொடர் ஒன்று அமைந்து இருக்கிறது. இதற்கு ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கு அடியில் இருந்து பொங்கியெழும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகியதால் அந்த மலைத் தொடர் உருவானது என்று விளக்கம் கூறுகின்றனர். குறிப்பாக அப்பகுதியில் புதிதாக கடல் தளப் பாறைகள் தொடர்ந்து உருவாகி இருபுறமும் விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தரையின் மேற்குப் பகுதியில் இருக்கும் தென் அமெரிக்கக் கண்டம் மேற்கு நோக்கியும், கிழக்குப் பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்கக் கண்டம் கிழக்கு நோக்கியும், நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.(குறிப்பு.1) தங்களின் கருத்துக்கு ஆதாரமாக ஆராய்ச்சியாளர்கள் கடல் தளப் பாறைகளின் தொன்மையைக் குறிப்பிடுகின்றனர். அதாவது அட்லாண்டி...

கண்டங்கள் நகர்வது பூகோள ரீதியில் சாத்தியமல்ல.விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய தென் பகுதிக் கண்டங்கள் எல்லாம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்துடன் இணைந்து இருந்ததாகவும், அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகக் கூறப் படுகிறது. இன்றும் கூடஇந்தக் கண்டங்கள் எல்லாம் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படுகிறது. குறிப்பாக கண்டங்களுக்கு அடியில் உள்ள பெரிய பாறைத் தட்டுகள் நகர்வதாகவும் கண்டங்கள் எல்லாம் அந்தப் பெரிய பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. இதே போன்று தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களும் கிழக்கு மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அட்லாண்டிக் கடல் தரையின் மேல் பூமிக்கு அடியில் இருந்து கடல் தரையைப் பொதுக் கொண்டு பொங்கியெழும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகுவதால் அப்பகுதியில் புதிய கடல் தரை உருவாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். தொடர்ந்து...

பாறை அடுக்குகள் திடீரென்று மேல் நோக்கி உயர்வதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது

Image
கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் நாசா ஆராய்ச்சியாளர்களால் அந்தக் கருத்தின் அடிப்படையில் இந்தோனேசியா சுனாமிக்கும் நில அதிர்ச்சிக்கும் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.ஆனால் இந்தோனேசியா சுனாமிக்குப் பிறகு அப்பகுதியில் இருக்கும் சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்திருந்தது. அதே போன்று கண்டங்கள் நகரும் பொழுது கண்டங்களின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று நம்பும் ஆராய்ச்சியாளர்களால் கண்டங்களின் மத்தியப் பகுதிகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கும் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.ஆனால் வட அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நில அதிர்ச்சிக்குப் பிறகு தரைப் பகுதிகள் உயர்ந்து இருக்கின்றன. எனவே தரைக்கு அடியில் இருக்கும் பாறை அடுக்குகள் திடீரென்று மேல் நோக்கி உயர்வதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.இதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.விஞ்ஞானி.க.பொன்முடி

நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏன் ஏற்படுகின்றது.விஞ்ஞானி.க.பொன்முடி.

புதை படிவங்கள் குறித்து அறிந்து கொள்வதில் எனக்கு எப்பொழுதுமே ஆர்வம் அதிகம்.ஒரு நாள் நேசனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையில் புகைப் படத்துடன் ஒரு செய்திக் கட்டுரை வெளியாகி இருந்தது. ஒரு மலையின் உச்சிப் பகுதியில் இரண்டு பேர் நின்று கொண்டு கையில் மண்வெட்டியால் தரையை தோண்டிக் கொண்டு இருக்கும் படம். அவர்கள் இருவரும் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த ட்ரைலோபைட் என்ற கடல் பூச்சியின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும், அந்த ஆராய்ச்சியாளர்கள் நின்று கொண்டு இருக்கும் இடம் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. உடனே எனக்கு அந்த மலைப்யானது பகுதி கடலுக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்து இருப்பது புரிந்தது. அடுத்த பக்கத்தைப் புரட்டிய பொழுது இன்னொரு புகைப் படம்.சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஒரு உள் நாட்டுப் பகுதியில் உள்ள ஒரு மலையில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் ட்ரைலோபைட் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது. அப்பொழுது எனக்கு மலைகள் ...

plate tectonic proved to be wrong by scientist.g.ponmudi.

South America Africa India and Australian continents are believed to be moving away from the central Antarctica continents by sea floor spreading process is proved to be wrong. researchers who believe that all the continents are moving also believe that new sea floor is being formed at the Central region of the Atlantic ocean.a process which the called sea floor spreading . according to them new sea floor is formed in that region by upwelling magma which surfaced and cooled and solidified and finally formed new sea floor rock.as the process continue new sea floor rocks are formed in the central region which pushing the old sea floor rock to the side. therefore the sea floor is moving in opposite direction therefore the continents of south America and Africa which is said to be on the moving plate also moving in opposite direction(east-west). this kind of sea floor spreading can be called as longitude spreading since all the longitude have same length.so there is no problem in this kind...

நில அதிர்ச்சிக்கு நாசா வைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்தை ஏற்க இயலாது.விஞ்ஞானி.க.பொன்முடி.

நீங்கள் டிசம்பர் 26.2004 ,அன்று சுமத்ரா தீவிற்கு அருகில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்ச்சியைத் தொடர்ந்து கடலில் எழுந்த ராட்சச அலைகள் இழுத்துச் சென்றதில் இரண்டு லட்சத்தி முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததை அறிந்திருப்பீர்கள். அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவின் வடமேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடிவரை உயர்ந்து காணப் பட்டது. எனவே சிமிழு தீவின் வடமேற்குப் பகுதி கடல் தரையில் இருந்து திடீரென்று மேல் நோக்கி உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது. ஆனால் அந்த அதிர்ச்சியானது சுமத்ரா தீவிற்கு அடியில் இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்ததால் ஏற்பட்டது என்று முதலில் தெரிவித்த நாசா அமைப்பு பிறகு எந்தவொரு விளக்கத்தையும் கூறாமல் திடீரென்று சுமத்ரா தீவிற்கு அடியில் ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான் ஏற்பட்டது என்று முன்னுக்குப் பின் முரணாக எந்த ஒரு ஆதாரத்தையும் குறிப்பிடாமல் இரு வேறு கருத்துக்களை வெளியிட்டிருகிறது. அத்துடன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இ...