தெற்காசிய சுனாமியை உருவாக்கியது எரிமலை -கண்டு பிடிப்பு
கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.ஆனால் இந்திய நிலப் பகுதியானது பத்து
கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப் பகுதியில் இருந்ததாகவும் அதன் பிறகு
ஒரு கண்டத் தட்டின் மேல் இருந்தபடி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து
தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள்
விளக்கம் கூறுகின்றனர்.
அதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டமும் தென் துருவப் பகுதியில் இருந்து ஒரு கண்டத் தட்டின் மேல் இருந்தபடி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
இவ்வாறு கண்டங்களைச் சுமந்தபடி நகர்ந்து கொண்டு இருக்கும் கண்டத் தட்டுகள்அடுத்த கண்டத் தட்டுக்கு அடியில் உரசியபடி நகர்ந்து செல்வதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
உதாரணமாக தெற்காசிய சுனாமிக்கு இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்து இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் சென்றதே காரணம் என்று நாசா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.இந்த நிலையில் அதே நாசா வெளியிட்ட இன்னொரு அறிக்கையில் ஆஸ்திரேலியாக் கண்டத் தட்டு நகர்ந்து இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் சென்றதால்தான் சுனாமி ஏற்பட்டது என்று தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
உண்மையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கண்டத் தட்டுகளின் மேல் இருந்தபடி வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் உள்ள பாடல் தரைப் பகுதியில் உரசல் ஏற்பட்டு பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
எனவே கண்டங்கள் நிலையாக இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலம் நிரூபணமாகிறது.

நில அதிர்ச்சி சுனாமி ஏன் ஏற்படுகிறது?


அதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டமும் தென் துருவப் பகுதியில் இருந்து ஒரு கண்டத் தட்டின் மேல் இருந்தபடி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
இவ்வாறு கண்டங்களைச் சுமந்தபடி நகர்ந்து கொண்டு இருக்கும் கண்டத் தட்டுகள்அடுத்த கண்டத் தட்டுக்கு அடியில் உரசியபடி நகர்ந்து செல்வதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
உதாரணமாக தெற்காசிய சுனாமிக்கு இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்து இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் சென்றதே காரணம் என்று நாசா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.இந்த நிலையில் அதே நாசா வெளியிட்ட இன்னொரு அறிக்கையில் ஆஸ்திரேலியாக் கண்டத் தட்டு நகர்ந்து இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் சென்றதால்தான் சுனாமி ஏற்பட்டது என்று தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
உண்மையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கண்டத் தட்டுகளின் மேல் இருந்தபடி வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் உள்ள பாடல் தரைப் பகுதியில் உரசல் ஏற்பட்டு பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.

(
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில்
அவ்வாறு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை )
ஆனால்
உலகம் முழுவதும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக்
குறித்து நாசா அமைப்பினர் தயாரித்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை
படத்தில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் தரைப்
பகுதியில் அவ்வாறு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.எனவே கண்டங்கள் நிலையாக இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலம் நிரூபணமாகிறது.

( இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் என்ன நடக்கிறது என்றே உறுதியாகத் தெரிய வில்லை - நாசா )
குறிப்பாக
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப்
பகுதியில் அருகருகே இந்ததாகவும் பிறகு பிரிந்து தற்பொழுது இருக்கும்
இடத்திற்கு நகர்ந்து வந்ததாகவும் நம்பப் படுகிறது.குறிப்பாக கண்டங்களுக்கு
இடையில் உள்ள கடலுக்கு அடியில் மலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தட்டு
உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தட்டின் மேல்
இருந்தபடி கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப்
படுகிறது.ஆனால் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் கடலடி மலைத்
தொடரும் உருவாகி இருக்க வில்லை.எனவே கண்டங்கள் ஒன்றாக இருந்து பிரிந்து
நகர்ந்ததாகக் கூறப் படும் விளக்கம் அடிப்படை ஆதாரமற்ற கருத்து.நில அதிர்ச்சி சுனாமி ஏன் ஏற்படுகிறது?

(படம்- அலாஸ்கா பகுதியில் உள்ள பெலிக் எரிமலையைச் சுற்றி உருவான மேடு பள்ள வளையங்கள்)
இந்த
நிலையில் எரிமலைகள் குமுறி வெடிக்கும் பொழுதும்; உயர்ந்து இறங்கும்
பொழுதும் எரிமலையை சுற்றி பல நூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரைப்
பகுதியும் உயர்ந்து இறங்குவதால் எரிமலையை சுற்றி வரப்பு போன்று உருவாகும்
மேடு பள்ள வளையங்கள், சுமத்ரா தீவுப் பகுதியில் உள்ள சிமிழு தீவில் நில
அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றி உருவாகி இருப்பது
செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
(சுமத்ரா
தீவிற்கு அருகில் உள்ள சிமிழு தீவில் 20.02.2008 அன்று ஏற்பட்ட
அதிர்ச்சியால் சிமிழு தீவின் தரையில் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் வரப்பு போன்று மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததை பதிவு செய்த
செயற்கைக் கோள் படம்- ஜப்பான் ஆய்வு மையம்
வெளியிட்ட படம் )
குறிப்பாக சிமிழு தீவின் வட மேற்குப்
பகுதியானது தெற்காசிய சுனாமிக்குப் பிறகு கடல் மட்டத்தில் இருந்து நான்கு
அடிவரை உயர்ந்து காணப் பட்டது.அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில்
சுனாமிக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து கடுமையான நில அதிர்ச்சி
ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலையை சுற்றி பல நூறு
கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரைப் பகுதியும் உயர்ந்து இறங்குவதால் எரிமலையை
சுற்றி வரப்பு போன்று உருவாகும் மேடு பள்ள வளையங்கள், ஹைத்தி தீவில் நில
அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றி உருவாகி இருப்பது
செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.எனவே பூமிக்கு அடியில்
இருந்த எரிமலை வெடித்துக் குமுறியதால்தான் தெற்காசிய சுனாமி உருவாகி
இருக்கிறது.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
Comments