பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததால்தான் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டது.விஞ்ஞானி.க.பொன்முடி. நிகழ்வு ஒன்று. தெற்காசிய சுனாமிக்கு, நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால், உண்மையான காரணத்தை தெரிவிக்க இயல வில்லை. ஏனென்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் நம்புவதை போன்று உண்மையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது, தனித் தணியாகக் கடல் தளங்களுடன், வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில்,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு ,கடல் தளத்தின் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். இந்த நிலையில், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான, முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'ஒன்றை, நாசா ஆராய்ச்சியாளர்கள்...
Comments