Posts

plate tectonic proved to be wrong by scientist.g.ponmudi.

South America Africa India and Australian continents are believed to be moving away from the central Antarctica continents by sea floor spreading process is proved to be wrong. researchers who believe that all the continents are moving also believe that new sea floor is being formed at the Central region of the Atlantic ocean.a process which the called sea floor spreading . according to them new sea floor is formed in that region by upwelling magma which surfaced and cooled and solidified and finally formed new sea floor rock.as the process continue new sea floor rocks are formed in the central region which pushing the old sea floor rock to the side. therefore the sea floor is moving in opposite direction therefore the continents of south America and Africa which is said to be on the moving plate also moving in opposite direction(east-west). this kind of sea floor spreading can be called as longitude spreading since all the longitude have same length.so there is no problem in this kind...

நில அதிர்ச்சிக்கு நாசா வைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்தை ஏற்க இயலாது.விஞ்ஞானி.க.பொன்முடி.

நீங்கள் டிசம்பர் 26.2004 ,அன்று சுமத்ரா தீவிற்கு அருகில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்ச்சியைத் தொடர்ந்து கடலில் எழுந்த ராட்சச அலைகள் இழுத்துச் சென்றதில் இரண்டு லட்சத்தி முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததை அறிந்திருப்பீர்கள். அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவின் வடமேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடிவரை உயர்ந்து காணப் பட்டது. எனவே சிமிழு தீவின் வடமேற்குப் பகுதி கடல் தரையில் இருந்து திடீரென்று மேல் நோக்கி உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது. ஆனால் அந்த அதிர்ச்சியானது சுமத்ரா தீவிற்கு அடியில் இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்ததால் ஏற்பட்டது என்று முதலில் தெரிவித்த நாசா அமைப்பு பிறகு எந்தவொரு விளக்கத்தையும் கூறாமல் திடீரென்று சுமத்ரா தீவிற்கு அடியில் ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான் ஏற்பட்டது என்று முன்னுக்குப் பின் முரணாக எந்த ஒரு ஆதாரத்தையும் குறிப்பிடாமல் இரு வேறு கருத்துக்களை வெளியிட்டிருகிறது. அத்துடன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இ...

பத்திரிக்கைச் செய்தி வெளியீடு.

விடுநர் விஞ்ஞானி.க.பொன்முடி. 1,அப்பு தெரு, நுங்கம் பக்கம், சென்னை.600 034. அலை பேசி.98400 32928. பெறுனர் செய்தி ஆசிரியர், நாளிதழ்,வார இதழ், சென்னை. ஆசிரியருக்கு எனது பணிவான வணக்கம். பொருள் :சிமிழு தீவு உயர்ந்ததால் சுனாமி உருவானது. கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவிற்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்ச்சியினால் சுனாமி உருவானது. அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவின் வடமேற்குப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி உயர்ந்து இருந்தது. அதனால் தீவின் வட மேற்குப் பகுதியில் புதிதாகக் கடற் கரை உருவாகியிருந்தது.அத்துடன் தீவைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் மற்றும் கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலே வெளியில் தெரிந்தன.எனவே கடல் தரையில் இருந்து சிமிழு தீவு திடீரென்று உயர்ந்ததால்தாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டிருகிறது. சுனாமிக்கு கூறப் படும் இரு வேறு விளக்கங்கள். நாசா என்று அழைக்கப் படும் அமெரிக்காவின் முன்னணி அறிவியல் அமைப்பு 10.1.2005 அன்று வெளியிட்ட அறிக்கையில் சுமத்ரா தீவு அமைந்திருக்கும் பாறைத் தட்டு...

நகரும் கண்டங்கள் கருத்துக்கு எதிரான விலங்கியல் ஆதாரம் சமர்ப்பித்தல்.

பேலியோசீன் என்று அழைக்கப் படும் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் தென் அமெரிக்கக் கண்டமானது வட அமெரிக்கக் கண்டத்துடன் தொடர்பு இன்றி இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். வடபகுதிக் கண்டங்கள் லாரேசியா கண்டங்கள் என்றும் தென் பகுதிக் கண்டங்கள் கோண்டுவானா என்ற தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்ததாகக் கருதப் படுகிறது. ஆனால் இந்தக் காலக் கட்டத்தில் ஆசியக் கண்டத்தில் பான்ட்டோ டோன்ட் என்று அழைக்கப் படும் குளம்புக் கால் விலங்கினங்கள் தோன்றி வட அமெரிக்கக் கண்டத்திற்கு பரவியது. அதற்கு எதுவாக ஆசியக் கண்டத்திற்கும் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையே நிலத் தொடர்பு இருந்தது. ஆனால் வட அமெரிக்கக் கண்டத்துடன் எந்தவிதத் தொடர்பும் இன்றி இருந்ததாக கூறப் படும் தென் அமெரிக்கக் கண்டத்தில் பான்ட்டோ டோன்ட் விலங்கினத்தைச் சேர்ந்த அல்சி டெடோர் பிக்னியா என்ற விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் எடுக்கப் பட்டிருகிறது. இதன் அடிப்ப டையில் மார்டின் ஜெக்லே என்ற தொல் விலங்கியலாளர் பேலியோசீன் கால கட்டத்தில் கண்டங்கள் நகர்வதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல் அல்லாமல் , தென் அமெரிக்கக் கண்டமானது வட ...

பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்கின்றன.-விஞ்ஞானி.க.பொன்முடி.

நிலப் பகுதிகள் மேல் நோக்கி உயர்ந்து கொண்டு இருப்பதற்கு வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத்தாக்கு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத்தாக்கானது ஆறாயிரம் அடி உயரத்திற்கு பல்வேறு பாறைத் தட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போன்று அமைந்திருக்கிறது. குறிப்பாக கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத்தாக்கானது வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் கொலராடோ பீட பூமிப் பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. எனவே பூமிக்கு அடியில் இருந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததாலேயே கொலராடோ பீட பூமி உருவாகியிருக்கிறது. அதே போன்று பாறைத் தட்டுகள் மேலும் மேலும் உயர்ந்ததால் நிலம் பிளவு பட்டு கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கு உருவானது. ஆனால் கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆறாயிரம் அடி உயரம் வரை அமைந்து இருக்கும் அடுக்குப் பாறைத் தட்டுகளை, பிளவுப் பள்ளத்தாக்கிற்கு இடையே ஓடிக் கொண்டு இருக்கும் கொலராடோ ஆறு அரிக்கப் பட்டதால் உருவானது என்று கருதப் படுகிறது. முக்கியமாக கிராண்ட் கன்யன் ப...

நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது?

பத்திரிக்கை செய்தி வெளியீடு. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம். நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது?-விஞ்ஞானி.க.பொன்முடி. முதலை போன்ற தோற்றத்தில் இருக்கும் இருக்கும் மெசோ சாராஸ் என்று விலங்கு இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு குளம் குட்டை ஏரி போன்ற நீர் நிலையில் வாழ்ந்த விலங்காகும். இந்த விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் அட்லாண்டிக் கடலால் பிரிக்கப் பட்ட தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் இருந்து அகழ்வாய்வு மூலம் எடுக்கப் பட்டது. இதன் அடிப் படையில் நிலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கு நிச்சயம் அட்லாண்டிக் கடலைக் கடந்து தென் அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்க இயலாது. எனவே இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா கற்றும் ஆப்பிரிக்கா முதலான கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்திருக்க வேண்டும் என்றும் பிறகு தனித் தனியாக பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர் விளக்கம் கூறினார். இன்றும் கூட இந்தக் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நம்பப் ப...

பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்வதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆய்வில் கண்டு பிடிப்பு.

பத்திரிக்கை செய்தி வெளியீடு. விஞ்ஞானி.க.பொன்முடி, சென்னை 600 034, கைப்பேசி:98400 32928. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம். பொருள்:பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரும் பொழுது நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுவதை ஆய்வு மூலம் கண்டு பிடித்திருக்கிறேன். நிலத்தில் வாழ்ந்த விலங்கினங்களின் புதை படிவங்கள் பல கண்டங்கள் மற்றும் தீவுகளில் காணப் படுவதன் அடிப் படையில் முன்னொரு காலத்தில் இந்த கண்டங்கள் மற்றும் தீவுகள் ஒன்றாக இருந்து பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகர்ந்து கொண்டு இருக்கும் கண்டங்களின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்ளும் பொழுதே நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையே தரைவழித் தொடர்பு இருந்ததே விலங்கினங்கள் பல கண்டங்கள் மற்றும் தீவுகளுக்கு பரவியதற்கு காரணம். கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்ததற்கு மூன்று முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதாரம்,1 நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகள...