இரண்டு நிகழ்வுகள் மூலம் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இரண்டு நிகழ்வுகள் மூலம், பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததால்தான் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.அத்துடன் கடலானது,பூமிக்குள் இருந்து வந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.அதே போன்று பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.விஞ்ஞானி.க.பொன்முடி. நிகழ்வு ஒன்று. தெற்காசிய சுனாமிக்கு, நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால், உண்மையான காரணத்தை தெரிவிக்க இயல வில்லை. ஏனென்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் நம்புவதை போன்று உண்மையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில்,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு ,கடல் தளத்தின் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். இந்த நிலையில், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான, முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'ஒன்றை, நாசா ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர். அந்த வரைபடத்தில், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில்,அதே நாசா ஆராய்ச்சியாளர்கள்,கண்டங்களின் நகர்ச்சியைக் குறிப்பதாகக் கூறி, அதே நாசா அமைப்பினர், இன்னொரு வரை படத்தையும் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வரைபடத்தில் ''இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், என்ன நடக்கிறது, என்று உறுதியாகத் தெரிய வில்லை'' என்றும் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. இந்த நிலையில், கடந்த 26.12.2004 அன்று, சுமத்ரா தீவுப் பகுதியில் உருவான, சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சியானது, இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது, இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில், உரசிய படி நகர்ந்து சென்றதால், ஏற்பட்டது, என்று சில புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த விளக்கத்தை நாசா வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில்,முன்பு கூறிய விளக்கத்தை நிராகரிக்காத நிலையில், அதே நாசா, ஆஸ்திரேலியாக் கண்டம் நகர்ந்ததால்தான், தெற்காசிய சுனாமியை உருவாக்கிய, நில அதிர்ச்சிகள் ஏற்பட்டது, என்று இன்னொரு விளக்கத்தையும் வெளியிட்டு இருக்கின்றனர். அதாவது அடிப்படை ஆதாரம் இல்லாத காரணத்தால் ,கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில், தெற்காசிய சுனாமிக்கு நாசா உண்மையான காரணத்தை தெரிவிக்க இயல வில்லை. இந்த நிலையில்,பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால், தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது, தரைமட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. தெற்காசிய சுனாமியின் பொழுது ,சுமத்திரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும் சிமிலு துன்ற தீவின் வடமேற்கு பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.அதனால் அப்பகுதியில் புதிதாக கடற்கரை உருவாகி இருந்தது.அத்துடன் அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்களும் வெளியில் தெரிந்தன. தீவு ஏன் உயர்ந்தது? இந்த நிலையில் அதே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நிலா அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது,நிலா அதிர்ச்சி மையத்தை சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படத்தில் பதிவாகி இருக்கிறது. இது போன்ற தரைமட்ட மாறுபாடுகளானது, எரிமலைகளைச் சுற்றிலும் உருவாகி இருப்பதும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படத்தில் பதிவாகி இருக்கிறது. குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் நான்கு எரிமலைகளைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படத்தில் பதிவாகி இருக்கிறது. ஒரு எரிமலைக்கு அடியில் பாறைக் குழம்பு வந்து செல்வதால் எரிமலைகள் உயர்ந்து இறங்குகின்றன.அப்பொழுது அந்த எரிமலைகளானது சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குகின்றன.அதனால் அந்த எரிமலையை சுற்றிலும் உள்ள தரைப் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உயர்ந்து இறங்குவதால்,அந்த எரிமலையை சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடுபள்ள வளையங்கள் உருவாகுகின்றன. எனவே,பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் சிமிலு தீவு உயர்ந்து இருப்பதுடன் தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்படவும் காரணமாக இருந்து இருக்கிறது. தீவு உயரும் பொழுது,பாறை அடுக்குகளை இடையில் உரசல் ஏற்பட்டதால்,தெற்காசிய சுனாமியை உருவாக்கிய, நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருக்கின்றன. நிகழ்வு இரண்டு. நாசா ஆராய்ச்சியாளர்களைப் போலவே,அடிப்படை ஆதாரம் இல்லாத காரணத்தால், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கும், ஹைத்தி தீவில், 12.01.2010 அன்று, உருவான சுனாமியை, உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கும், (USGS, united states of geological survey) என்று அழைக்கப் படும் ,அமெரிக்க ஐக்கிய புவியியல் கழகத்தை சேர்ந்த சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால், உண்மையான காரணத்தைத் தெரிவிக்க இயல வில்லை. ஏனென்றால், கரீபியன் தீவுக் கூட்டமானது, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில்,குறிப்பாக அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்து இருக்கிறது. கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி,அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில்,கடலுக்கு அடியில்,வடக்கு தெற்கு திசைகளை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் ,பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக்கு குழம்பு மேற்பகுதிக்கு தொடர்ச்சியாக வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. குறிப்பாக,கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி,அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், வட அமெரிக்கக் கண்டமானது, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதேபோன்று, அந்த கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், யூரேசியக் கண்டமானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதே போன்று, அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், தென் அமெரிக்கக் கண்டமானது, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதே போன்று, அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், ஆப்பிரிக்கக் கண்டமானது, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி, உண்மையில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில்,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு ,கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால்,நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது, தெரிய வந்துள்ளது. எனவே வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையில், எல்லையை வரையரை செய்ய இயல வில்லை.எனவே இந்தப் பகுதியானது, ‘வரையரைக்கப் படாத எல்லைப் பகுதி’ என்று அழைக்கப் படுகிறது. எனவே வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையில்,இருக்கும் கடல் தரையின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏன் ஏற்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாகக் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி, அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,வடக்கு தெற்கு திசைகளை நோக்கி, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,பூமிக்குள் இருந்து, வெப்பமான பாறைக் குழம்பு தொடர்ச்சியாக மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதனால் அந்தக் கடல் தளங்களுடன், அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களும், எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் படி,உண்மையில் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருந்தால்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும் எரிமலைப் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, சில லட்சம் ஆண்டுகளாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில், கண்டங்களுக்கு அருகில் இருக்கும், கடல் தளத்தின் தொன்மையானது, பல கோடி ஆண்டுகளாக இருக்க வேண்டும். இந்த நிலையில், 'ராண்டல் ரைட்' என்ற புவியியல் வல்லுநர், அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளான 'புனித பீட்டர் பாறை' மற்றும் ''புனித பால்'' பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டார். அப்பொழுது, அந்தப் பாறைகளின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி'' ஆண்டுகளாக இருப்பதைக் கண்டு பிடித்து, அமெரிக்கப் புவியியல் ஆய்விதழில் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக பூமியின் மேல் காணப் படும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில், பூமி தோன்றி, நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம், என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. இதன் மூலம், பூமி தோன்றிய காலத்தில் இருந்தே, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து, நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன், கடல் தளமானது நிலையாகவும்,தொடர்ச்சியாகவும் இருப்பதுடன், கண்டங்களும் நிலையாக இருப்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. எனவே வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையில்,இருக்கும் கடல் தரையின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படவில்லை. இந்த நிலையில், கடந்த 1976 ஆம் ஆண்டு,ரட்ஜர்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனரான, டாக்டர் பீட்டர் ரானா,தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,ஒரு நீர் மூழ்கிக் கலனின் மூலம்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு மைல் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஆய்வு செய்தனர். அந்த ஆழத்தை அடைய அவர்களுக்கு இரண்டு மணி நேரமானது. எரிமலைகளும் சுடு நீர் ஊற்றுக்களும் நிறைந்த, அந்தக் கடலடி எரிமலைத் தொடரின் கிழக்குப் பகுதியில், பேலியோடிக்டின் என்று அழைக்கப் படும், கடல் உயிரினத்தின் கூடுகளின் புதை படிவங்களைக் கண்டு பிடித்தனர். கடலுக்கு அடியில் புதை படிவங்கள் உருவாக வாய்ப்பில்லை. இதன் மூலம் அட்லாண்டிக் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டமானது, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில்,குறிப்பாக அட்லாண்டிக் கடல் பகுதியில்,கவிழ்த்துப் போட்ட,''ட'' வடிவில் அமைந்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள பெரிய தீவுகளாக,க்யூபா,ஹிஸ்பானொலியா,போர்டோ ரிக்கோ,மற்றும் ஜமைக்கா ஆகிய தீவுகளானது, கண்டங்களைப் போன்று, இலேசான கிரானைட் பாறையால் ஆகி இருக்கிறது.ஆனால் ,கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில் இருக்கும் எரிமலைத் தீவுகளானது,வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது. இந்த நிலையில், கரீபியன் தீவுகள் எப்படி உருவானது என்றே புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிய வில்லை. ஏனென்றால்,கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி,அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில்,கடலுக்கு அடியில்,வடக்கு தெற்கு திசைகளை நோக்கி, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும்,கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,பூமிக்குள் இருந்து,வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு தொடர்ச்சியாக வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதன் அடிப்படையில்,வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்கும் அட்லாண்டிக் கடல் தளமானது, முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இந்த நிலையில்,கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிழம்பால், அட்லாண்டிக் கடல் தளமானது துளைக்கப் பட்டால்,கடல் தளத்தின் மேல் உருவாக் கூடிய எரிமலைகளானது, கிழக்கு திசையில் இருந்து, மேற்கு திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும். ஆனால்,கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில் இருக்கும் எரிமலைத் தீவுகளானது,வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது. எனவே நகர்ந்து கொண்டு இருக்கும் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் கரீபியன் எரிமலைகள் எப்படி உருவானது என்ற கேள்வி எழுந்தது. சில ஆராய்ச்சியாளர்கள், கரீபியன் தீவுக் கூட்டமானது, அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி இருக்கலாம் என்று ஒரு கருத்தை முன்மொழிந்தனர்.இந்தக் கருத்தானது 'அட்லாண்டிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது.ஆனால் இந்தக் கருத்தின் அடிப்படையில், கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, எரிமலைத் தீவுகளின் தோற்றத்துக்கு விளக்கம் கூற இயல வில்லை. இந்த நிலையில் சில புவியியல் ஆராய்ச்சியாளர்கள், கரீபியன் தீவுக் கூட்டமானது ,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி இருக்கலாம் என்று கருத்தை முன்மொழிந்து இருக்கின்றனர். இந்தக் கருத்தானது 'பசிபிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது. 'பசிபிக் கடல் மாதிரி' குறிப்பாகக் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில், வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு, தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, கிழக்கு மற்றும் வட மேற்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன், வட அமெரிக்கக் கண்டமானது, மேற்கு திசையை நோக்கியும், தென் அமெரிக்கக் கண்டமானது, வட மேற்கு திசையை நோக்கியும், நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.இந்த நிலையில் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பெரிய இடை வெளி இருந்ததாகவும்,நம்பப் படுகிறது. இந்த நிலையில் , பசிபிக் கடல் பகுதியில், குறிப்பாகத் தற்பொழுது காலபாகஸ் எரிமலைத் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில், எரிமலை செயல் பாட்டால், கரீபியன் தீவுக் கூட்ட மானது, உருவான பிறகு ,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும், தற்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு கருத்து முன் மொழியப் பட்டு இருக்கிறது. அவ்வாறு கரீபியன் பாறைத்த தட்டையானது கிழக்கு திசையை நோக்கி நகரும் பொழுது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் அட்லாண்டிக் கடல் தளமானது, கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் சென்ற பிறகு,வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாகி,மேல் நோக்கி உயர்ந்து அட்லாண்டிக் கடல் தளத்தை துளைத்ததால், அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல்,வடக்கு தெற்கு திசையை நோக்கி எரிமலைகள் உருவானதாக விளக்கம் கூறப் பட்டது. ஆனால் இந்த விளக்கத்தில் ஒரு சிக்கல். தற்பொழுது அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் பாலம் போன்று மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது. எனவே கரீபியன் பாறைத் தட்டு எப்படி மத்திய அமெரிக்க நிலப் பகுதியைக் கடந்து பசிபிக் கடல் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடல் பகுதிக்கு வந்தது என்ற கேள்வி எழுந்தது. எனவே இந்த சிக்கலைத் தீர்க்கும் விவாதமாக, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில், இணைப்புப் பாலமாக இருக்கும், மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது,பூமிக்குள் அமிழ்ந்து இருந்ததாகவும்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரீபியன் தீவுக் கூட்டம் நுழைந்த பிறகே,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது,பூமிக்குள் இருந்து உயர்ந்ததாகவும் நம்பப் பட்டது. இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள, நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை, இந்தியாவின் தொல் தாவரவியல் வல்லுநரான ஸ்ரீ வத்சவா குழுவினர் கண்டு பிடித்தனர். அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, டைனோசரின் எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் அமெரிக்கக் கண்டங்களும், கரீபியன் தீவுக் கூட்டமும் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே, எப்பொழுதும் இருந்திருப்பது, ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. அத்துடன் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக இருந்த மத்திய அமெரிக்க நிலப் பகுதி வழியாகவும்,அதே போன்று அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக இருந்த கரீபியன் நிலத் தொடர்பு வழியாகவும், டைனோசர்கள் முதலான விலங்கினங்களின் போக்குவரத் நடைபெற்று இருப்பதும் தெளிவாகிறது. எனவே தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவானது, என்ற கேள்விக்கு, பசிபிக் கடல் மாதிரியின் அடிப்படையிலும், அதே போன்று அட்லாண்டிக் கடல் மாதிரியின் அடிப்படையிலும், புவியியல் ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை. அதனால் கரீபியன் தீவுக் கூட்டமானது தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரிய வில்லை. முக்கியமாக கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா,ஹிப்பானொலியா,ஜமைக்கா,போர்டோ ரிக்கோ,ஆகிய பெரிய தீவுகளானது கண்டங்களைப் போன்று, கிரானைட் வகைப் பாறையால் ஆனது. இதன் அடிப்படையில் அந்தத் தீவுகள் எரிமலை செயல் பாட்டால் உருவாகி, நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதும் தெளிவாகிறது. முடிவாக,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையிலும்,அதே போன்று,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியின் உச்சிப் பகுதிகளில் நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைகள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையிலும், முக்கியமாக அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் கரீபியன் தீவு எரிமலைகளானது வடக்கு தெற்கு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் அடிப்படையிலும், அட்லாண்டிக் கடல் தரையானது நிலையாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபாவில், பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் அடிப்படையில் அமெரிக்கக் கண்டங்களும், கரீபியன் தீவுக் கூட்டமும் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே எப்பொழுதும் இருந்திருப்பது, ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. அத்துடன் டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதும், அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில், கரீபியன் தீவுகள் தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன், அதன் வழியாக டைனோசர்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. இந்த நிலையில், கடல் மட்டம் தாழ்வாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக இருந்த கரீபியன் தீவானது, தற்பொழுது இருப்பதை போன்று, தனித் தனியாகப் பிரிந்ததற்கு காரணம் என்ன, என்ற கேள்வி எழுகிறது. முக்கியமாகக் கியூபா தீவில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் ,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது நிரூபணம் ஆகிறது.அதே போன்று கடல் நீரானது, பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்த நீரால் உருவானது, என்பதும் நிரூபணம் ஆகிறது. அதே போன்று, கரீபியன் தீவுகளில் கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. இதன் மூலம் கரீபியன் தீவுகளும் , கடலுக்கு அடியில் இருந்து,கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இவ்வாறு கடல் மட்டமும், கரீபியன் நிலப் பகுதியும், மாறி மாறி உயர்ந்து இருப்பதன் மூலம், பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இவ்வாறு பூமி விரிவடைந்ததால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக இருந்த கரீபியன் நிலப் பாலமானது பல பகுதிகளாக பிளவு பட்டு பிரிந்திருக்கிறது.அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கரீபியன் தீவுகளாக உருவாகி இருக்கிறது. குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள பெரிய தீவுகளான கியூபா,ஹிப்பானொலியா,ஜமைக்கா,போர்டோ ரிக்கோவின் கடற் கரை ஒரப் பகுதிகள், ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று இருக்கிறது.இதன் மூலம் பூமி விரிவடைந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. அதாவது கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் புவியியல் ஆராய்ச்சியாளர்களால், கரீபியன் தீவுக் கூட்டம், எப்படி உருவானது, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று விளக்கம் கூற இயல வில்லை. எனவே ,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று நேரிடையாகக் கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது வட அமெரிக்கக் கண்டத் தட்டு, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நம்பப் படுகிறது.இந்த நிலையில், கரீபியன் பாறைத் தட்டானது, அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தாலும் கூட,வட அமெரிக்கக் கண்டத் தட்டை விட மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் , வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில், கரீபியன் பாறைத்த தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக எடுத்துக் கொள்ள முடியும். அதே போன்று, கரீபியன் பாறைத் தட்டானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் எப்படியோ நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, தற்பொழுது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்.பொருள் கொள்ள முடியும். அவ்வாறு இல்லாமல் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கிறது என்ற கருத்துக்கும் கூட, மேற்சொன்ன அதே விளக்கத்தை பொருத்திக் கொள்ள முடியும். ஆக, கரீபியன் தீவுக் கூட்டமானது, எங்கே எப்படி உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில்,அமெரிக்கப் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் சாமர்த்தியமாக ஒரு தந்திரமான விளக்கத்தைக் கூறி தப்பித்து இருக்கின்றனர். நிச்சயம் இந்த விளக்கமானது,ஆதாரத்தின் அடிப்படையிலான ,ஒரு அறிவியல் விளக்கம் அல்ல . உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டமானது, எங்கே எப்படி உருவாகி, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்ற கேள்விக்கு, ஆதார பூரவமாக விளக்கம் கூறிய பிறகு,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கு விளக்கம் கூறினால் மட்டுமே, அந்த விளக்கமானது, அறிவியல் விளக்கமாக இருக்கும். எனவே ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில் ஹைத்தி தீவில் கடந்த 12.01.2010 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, ''இரண்டாவது முறையாகவும்'' ஆணித் தரமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

2013 ஆம் ஆண்டு,ஆர்க்டிக் பகுதியில் பனி அதிகரித்ததால், எகிப்தில் பனி பொழிந்தது.