images and references for my research report

இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆழமற்ற கடற் கரைப் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள,முதலை போன்ற, ''மெசோ சாரஸ்'' என்று அழைக்கப் படும் ஊர்வன வகை விலங்கினத்தின் புதை படிவங்களானது,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. இதன் அடிப்படையில்,நிச்சயம் இந்த விலங்கால் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து இந்த இரண்டு கண்டங்களுக்கும் பரவி இருக்க இயலாது. எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நிச்சயம் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும்.அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தைக் கூறினார். குறிப்பாக அவர்,ஒரே கால நிலையில் வாழக் கூடிய ,வளரக் கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரை படத்தை மாற்றி அமைத்தார். அதன்...