Posts

பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள். தீவுகளில் விலங்கினங்கள் காணப்படுவதற்கு டார்வின் கூறிய ''தற்செயல் பரவல் முறை'' ஒரு தவறான விளக்கம் . ஆரம்பத்தில் பூமி தட்டையானது என்ற கருத்து நம்பப் பட்டதால், கடலுக்குள் நெடுந் தொலைவு சென்றால் பூமியை விட்டு வெளியில் விழுந்து விடுவோம் என்று நம்பப் பட்டது. அதனால் கடலுக்குள் அதிக தொலைவுக்கு செல்ல மாலுமிகள் அஞ்சினர். ஆனால்,துறை முகத்தை நோக்கி கப்பல் வரும் பொழுது முதலில் கப்பலின் கொடி மரம் தெரிவதும் அதன் பிறகு கப்பலின் நடுப் பகுதி தெரிவதும் இறுதியாக கப்பலின் அடிப்படகுதி தெரிவதையும் கண்டபிறகு பூமி ஒரு கோளம் என்று ஆரியப் பட்டது. இந்த நிலையில் மெகல்லன் என்ற ஐரோப்பிய மாலுமி,கப்பலில் உலகை வலம் வந்த பிறகே, பூமி ஒரு கோளம் என்பது உறுதிப் படுத்தப் பட்டது. அதன் பிறகு ஐரோப்பியர்கள் பசிபிக் பெருங்கடலில் கடலில் பயணம் செய்து பல புதிய தீவுகளை கண்டுபிடித்து தங்கள் நாடுகளுக்கு சொந்தம் கொண்டாடிய பொழுது, பல தீவுகளில் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அதுகுறித்து ஐரோப்பாவிற்கு திரும்ப வந்து கூறியதும் மக்கள் அ